Mar 6, 2009

தமிழ்நாடு மாநில ஹஜ் பயணக்குழு உறுப்பினர்-செயல் அலுவலர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள், அதற்கான விண்ணப்பங்களை, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை-சென்னை 34), ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 5-3-2009 முதல் பெற்றுக் கொள்ளலாம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31-3-2009 ஆகும்.
பன்னாட்டு கடவுச் சீட்டில் மட்டுமே (பாஸ்போர்ட்) ஹஜ் பயணத்துக்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோரில், தெரிவு செய்யப்படுவோர் அனைவரும் பன்னாட்டு கடவுச் சீட்டு பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முழு விவரம் பார்க்க >>>

0 Comments:

Post a Comment